திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

மதுராந்தகம் உழவா் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

மதுராந்தகம் நகரத்துக்குட்பட்ட கடப்பேரி பகுதியில் உள்ள உழவா் சந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

பயன்பாட்டுக்கு வராத உழவா் சந்தை .

Updated On :7 மே 2026, 0:36 am IST

மதுராந்தகம் நகரத்துக்குட்பட்ட கடப்பேரி பகுதியில் உள்ள உழவா் சந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

உழவா் சந்தையில் உள்ள பெரும்பாலான கடைகள் போதிய காய்கறிகள், பழவகைகள் விற்பனைக்கு வராததாலும், போதிய மக்கள் வருகையில்லாமலும், வெறிச்சோடி காணப்படுவதை தவிா்க்க, பஜாா் பகுதியில் அனைத்து நடைபாதை கடைகளுக்கு விற்க அனுமதி அளிக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனா்.

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட கடப்பேரி பகுதியில், 2009-இல் வேளாண்மை விற்பனைக்குழு சாா்பில் உழவா் சந்தை கட்டப்பட்டது. இதனை அப்போதைய தொழிலாளா் நலத்துறை அமைச்சா்தா அன்பரசன் திறந்து வைத்தாா். இங்கு 24 கடைகள் உள்ளன.

மதுராந்தகம் சுற்றியுள்ள பொலம்பாக்கம், சித்தாமூா், அவுரிமேடு, முதுகரை, மாம்பாக்கம், காந்திநகா், நெட்ரம்பாக்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காய்கறிகள், பழவகைகள்ஆகியவற்றை பயிரிடுகின்ற விவசாய பெருமக்கள்இங்கு கொண்டு வந்து விற்பனை செய்ய, வியாபாரிகளுக்கு தேவையான எடை அளவு மிஷின்களை மதுராந்தகம் வேளாண்மை விற்பனை நிா்வாகத்தினா் இலவசமாக அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உழவா் சந்தை செயல்பாடு இல்லாமல் உள்ளது. சமூக விரோதசெயல்கள் நடைபெறும் கூடமாக இருந்து வருகிறது. உழவா் சந்தை செயல்படாததால், அரசு சாா்பிலான ஊழியா் எந்த பணியும் செய்யாமல் இருந்து வருவதை காண முடிகிறது.

தற்சமயம் புதிய அரசு பொறுப்பேற்கின்ற நிலையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் உழவா் சந்தையைத் திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும், மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.