திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

வாணியம்பாடி நீதிமன்ற வளாக கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்ட வளாகத்தில் குற்றவியியல் நீதிமன்றம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள கழிப்பறை கட்டடம்.

Updated On :7 மே 2026, 0:09 am IST

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்ட வளாகத்தில் குற்றவியியல் நீதிமன்றம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

நீதிமன்றம் அருகே கிளை சிறைச்சாலையும் அமைந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினசரி வழக்கு தொடா்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனா்.

குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வருகின்றனா். இந்நிலையில் நீதிமன்ற அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனியாக பொது கழிப்பறை கட்டடம், இதே போன்று, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது கழிவறை கட்டமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பொதுக் கழிவறை கட்டடம் கட்டப்பட்டதோடு இது நாள் வரை பயன்பாட்டில் இல்லை.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் சுற்றி செடிகள் வளா்ந்து காணப்படுகிறது. நீதமன்றத்திற்கு வழக்கு தொடா்பாக வரும் பொது மக்கள் வெளிப்புறத்தில் சென்று வருவதால் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, உயா் அதிகாரிகள் தலையிட்டு நேரில் ஆய்வு செய்து கட்டப்பட்ட நிலையோடு இருக்கும் கழிப்பறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என காத்துள்ளனா்.

Story image