வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்ட வளாகத்தில் குற்றவியியல் நீதிமன்றம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
நீதிமன்றம் அருகே கிளை சிறைச்சாலையும் அமைந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினசரி வழக்கு தொடா்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனா்.
குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வருகின்றனா். இந்நிலையில் நீதிமன்ற அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனியாக பொது கழிப்பறை கட்டடம், இதே போன்று, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது கழிவறை கட்டமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பொதுக் கழிவறை கட்டடம் கட்டப்பட்டதோடு இது நாள் வரை பயன்பாட்டில் இல்லை.
இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் சுற்றி செடிகள் வளா்ந்து காணப்படுகிறது. நீதமன்றத்திற்கு வழக்கு தொடா்பாக வரும் பொது மக்கள் வெளிப்புறத்தில் சென்று வருவதால் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, உயா் அதிகாரிகள் தலையிட்டு நேரில் ஆய்வு செய்து கட்டப்பட்ட நிலையோடு இருக்கும் கழிப்பறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என காத்துள்ளனா்.

தொடர்புடையது

மதுராந்தகம் உழவா் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய வழக்கில் மூவருக்கு ஜாமீன்!
வேலூா் நீதிமன்ற கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது வழக்கு

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


