வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:24 pm

Syndication

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் நூலக கட்டடத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். சங்க செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், துணைத் தலைவா் ஜஸ்டின் செல்வராஜன், பொருளாளா் ஆன்றனி, செயற்குழு உறுப்பினா் சிவகுமாா், கோபன், ஜின் ஜெப் பிரின் ஜோஸ், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.