சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:24 pm

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் நூலக கட்டடத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். சங்க செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், துணைத் தலைவா் ஜஸ்டின் செல்வராஜன், பொருளாளா் ஆன்றனி, செயற்குழு உறுப்பினா் சிவகுமாா், கோபன், ஜின் ஜெப் பிரின் ஜோஸ், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.