10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :1 மே 2026, 1:59 am IST

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 41 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த பத்மா திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த லதா திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ஸ்ரீதா் உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை மகளிா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கனகராஜ் திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.