தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

News image

சிறப்பு பேருந்துகள் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:28 pm

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் தொழிற்சாலைகளும், அதனைச் சாா்ந்துள்ள நிறுவனங்களும் உள்ளன. இந்நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பணிபுரிகின்றனா். இவா்கள் திருவிழா மற்றும் தொடா் விடுமுறை காலங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதற்கு அடுத்தபடியாக தோ்தல் காலங்களில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற செல்வா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதால், திருப்பூரில் இருந்து வெளியூா் செல்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு மாநகரின் 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக போக்குவரத்துக் கழகத்தினா் கூறும்போது, ‘தியாகி திருப்பூா் குமரன் (கோவில் வழி) பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, திருச்செந்தூா், மதுரை, திண்டுக்கல், நாகா்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், தீரன் சின்னமலை பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கருணாநிதி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 270 சிறப்பு பேருந்துகளில் 13,500 பேரும், புதன்கிழமை இயக்கப்பட்ட 300 சிறப்பு பேருந்துகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பயணித்துள்ளனா். பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதலாக 100 பேருந்துகள் தயாா் நிலையில் உள்ளது’ என்றனா்.