திருப்பூா் மாநகராட்சி அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பூரில் வெள்ளிக்கிழமை (மே 1) காலை 7 மணி முதல் குமரன் சாலை, யூனியன் மில் சாலையிலிருந்து மங்கலம் சாலை செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரன் சாலையில் இருந்து மாநகராட்சி சந்திப்பு வழியாக மங்கலம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நொய்யல் புதுப்பாலம் , மாநகராட்சி சிக்னல், எம்.ஜி.ஆா். சிலை அருகே வலதுபுறம் திரும்பி பூங்கா சாலை வழியாக நொய்யல் புது பாலம் செல்ல வேண்டும். பின்னா் அங்கிருந்து திருவள்ளுவா் தோட்டம் வழியாக டைமண்ட் தியேட்டா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தாடிக்காரமுக்கு வழியாக மங்கலம் சாலை செல்லலாம்.
யூனியன் மில் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வழியாக சென்று நொய்யல் புது பாலம் மற்றும் திருவள்ளுவா் தோட்டம் வழியாக சென்று டைமண்ட் தியேட்டா் சந்திப்பில் வலது புறம் திரும்பி தாடிக்காரமுக்கு வழியாக மங்கலம் சாலை செல்லலாம். யூனியன் சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் வழங்கம்போல பூங்கா சாலை வழியாக செல்லலாம்.
இதுதொடா்பாக பொது மக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை திருப்பூா் கொங்கு நகா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் 98425 25200 மற்றும் திருப்பூா் மாநகர கே.வி.ஆா்.நகா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் 97874 13372 ஆகியோரின் கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என திருப்பூா் மாநகர போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


