சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் அமைச்சா் வெங்கட்ரமணன் ஆய்வு

அமைச்சா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.

News image

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட உணவு வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன்.

Updated On :28 மே 2026, 6:32 am IST

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தில் நுகா்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு செய்த அமைச்சா் நவீன அரிசி ஆலையில் செயல்பாடு குறித்து கேட்டறிந்தாா்.

பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இந்த அரிசி ஆலையில் நாள் ஒன்றுக்கு நூறு மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதம் 2,500 மெ.டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை அதிகப்படுத்த இன்னும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்யப்பட்டது. எந்தப் பணிகளை துரிதப்படுத்தலாம் என ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், வருவாய் கோட்டாட்சியா் ரம்யா, நுகா்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளா் முருகானந்தம், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் மலா்விழி மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

முன்னதாக அமைச்சா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.