திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வீட்டுக் கடன்: ரூ. 9,774 கோடி வழங்கி எஸ்.பி.ஐ. சாதனை

சென்னை, ஜன. 8: பாரத ஸ்டேட் வங்கி தமிழகம், புதுவையில் இதுவரை ரூ.9,774.30 கோடி வீட்டுக்கடன் வழங்கியுள்ளது என்று உள்ளூர் தலைமை அலுவலக (சென்னை) தலைமைப் பொது மேலாளர் ஜே. சந்திரசேகரன் தெரிவித்தார்.  இதன் மூ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சென்னை, ஜன. 8: பாரத ஸ்டேட் வங்கி தமிழகம், புதுவையில் இதுவரை ரூ.9,774.30 கோடி வீட்டுக்கடன் வழங்கியுள்ளது என்று உள்ளூர் தலைமை அலுவலக (சென்னை) தலைமைப் பொது மேலாளர் ஜே. சந்திரசேகரன் தெரிவித்தார்.

 இதன் மூலம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 327 பேர் பயனடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள எம்.ஆர்.சி. மையத்தில் "எஸ்.பி.ஐ. வீட்டுவசதி கண்காட்சி' வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் 28 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

 இடத்தில் உள்ள வில்லங்கம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வங்கி சார்பில் வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஜே. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது:

 பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஆண்டுதோறும் வீட்டுவசதி கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை தவிர தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதுவையிலும் இது போன்ற கண்காட்சி நடத்தப்படுகிறது.

 வீடு வாங்க விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அவரவர் வருமானத்துக்கேற்ப கடன் தொகை நிர்ணயிக்கப்படும். ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடனுக்கு முதல் வருடத்தில் 8.5 சதவீத வட்டியும், 2, 3-ம் ஆண்டுகளில் 9.25 சதவீத வட்டியும், அதன் பிறகு வரும் ஆண்டுகளுக்கு 9.75 சதவீத வட்டியும் கணக்கிடப்படும். அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை கடனை திரும்பச் செலுத்தும் வசதி உள்ளது.

 நடப்பு நிதியாண்டில் (2010-2011) 2010 டிசம்பர் 31 வரை ரூ.1,724.24 கோடி வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் ரூ.2,400 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சந்திரசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.