சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நவீன புகார் மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்கள் புகார் பிரிவு செயல்பட்டு வந்தது.
இந்தப் பிரிவில் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் சாலைப் பிரச்னைகள், வரிகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவித்து வந்தனர். இந்தப் புகார் பிரிவில் ஒரு கணினி மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சுதந்திர தின பொன்விழா அரங்கில் நவீன புகார் பிரிவு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது இந்தப் பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இதனை திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
இந்தப் பிரிவில் 10 கணினிகள் பயன்படுத்தபடவுள்ளன. மேலும் இதில் ஷப்ட் முறையில் 23 அலுவலர்கள் பணியாற்றுவர். பொதுமக்கள் கூறும் புகார்களை கணினியில் பதிந்து, அதற்கான பதிவு எண்ணையும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிப்பார்கள். இந்த எண் மூலம் புகார் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறியலாம்.
இந்தப் பிரிவில் உள்ள தொலைபேசிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். புகார் பிரிவில் உள்ள அலுவலர்கள் இணைப்பை துண்டிக்க முடியாது. தொலைபேசியில் நடைபெறும் உரையாடல்கள் பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்: மு.க. ஸ்டாலின்
மந்திரி பதவிக்காக த.வெ.க.விடம் மண்டியிட்டு... சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக அறிக்கை!

ஏழு முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை!

காமாக்யா தேவி கோயிலில் என்டிஏ தலைவர்கள் வழிபாடு!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
