ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருணாநிதி மோடிக்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி

News image
Updated On :14 ஜூன் 2014, 10:19 am

வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து  நதிநீர் பங்கீட்டை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசிடம் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முறையிட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதனை தமிழத்தில் ஆளும் அரசு ஏற்கவில்லை..

அதிமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்., தமிழக விவசாயிகளின் நலனை காக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.