மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்து முன்னணி பிரமுகர் படுகொலை: பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன்

News image
Updated On :19 ஜூன் 2014, 1:14 pm

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், புதன்கிழமை (ஜூன் 18) சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தச் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.

அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்துக்கு அருகில் சுரேஷ்குமாரின் டெலிபோன் பூத்தில் இரவு 10.30 மணிக்கு இந்தப் படுகொலை நடந்துள்ளது.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுரேஷ்குமார் இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப் பணியாற்றியவர். மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காத தூய எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டிருப்பது சமூக சிந்தனையாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்ட ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிப்படுத்தாத காரணத்தால் மீண்டும் இதுபோன்ற கொடூரச் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசு இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொலைகளைத் தடுக்க முடியும்.

சுரேஷ்குமாரை கொன்ற கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.