இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்கி வருகிறது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் 50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும்
தென்னந்திய நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், நிர்மலா சீதாராமன் பேசியது:
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் இந்தியாவில் வர்த்தகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்திய ஏற்றுமதிக்கான ஒற்றைச்
சாளர முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பல மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்த முறையின் கீழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான உரிமம், வெளிநாட்டில் வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி
நிறுவனங்கள் ஒற்றைசாளர முறையில் பெற்றுகொள்ள முடியும்.
இந்த முறையில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தச் சிக்கல்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு வர ஏற்றுமதியாளர்கள் முயற்சிக்க வேண்டும்.
அப்போதுதான் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியும் என்றார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் ரல்ஹான், முன்னாள் தலைவர் ரஃபீக் அகமது, மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!

பிரதமரை உணவருந்த அழைத்த திரிணமூல் காங்கிரஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


