பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

சென்னை மாநகரில் வியாழக்கிழமை மாலை முதல் பெய்த கனமழையை அடுத்து தாழ்வானப் பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை
Updated on
1 min read

சென்னை மாநகரில் வியாழக்கிழமை மாலை முதல் பெய்த கனமழையை அடுத்து தாழ்வானப் பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சுட்டுரையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி, விலங்குகளையும் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயரச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வெள்ள நீர் பெருக்கெடுத்துச் செல்லும் பகுதிகளில் நடந்து செல்ல வேண்டாம் எனவும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை சேமித்துக் கொள்ள வேண்டும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com