ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிறுமி கொலை: பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விசாரணை

வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்த வழக்கில், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:05 pm

DIN

வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்த வழக்கில், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வில்லிவாக்கம், பாரதி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி வெங்கடேஷ் (27). இவரது மனைவி ஜெயந்தி (23). இவர்களின் 4 வயது மகள் காவ்யா செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கடைக்குச் சென்றிருந்த ஜெயந்தி, வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது காவ்யாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். 
இந்நிலையில், புதன்கிழமை காலை ஜெயந்தியின் வீட்டின் அருகே உள்ள புதரில் காவ்யாவின் சடலம் கிடந்தது. சிறுமியின் வாயில் நுரையும், கன்னங்களில் காயங்களும் இருந்தன. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அச்சிறுமி தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.