தமிழ்நாடு வட்ட தபால்துறை தலைவர் எம்.சம்பத், வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்புவதற்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தச் சேவைகளை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்பும் வசதி தபால் அலுவலங்களில் இருந்தாலும், இதற்காக பிரத்யேகமான கவுன்ட்டர் சென்னையில் பரங்கிமலை, தியாகராயநகரில் மட்டும் உள்ளன. இதுபோல, மற்ற மாநகரங்களில் ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள், தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற மாநகரங்களில் சிறப்பு கவுன்ட்டர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் சம்பத்.
தமிழ்நாடு தபால் வட்டத்தில் தலைமை தபால் அலுவலகம், துணை தபால் அலுவலகம், கிளை தபால் நிலையம் என்று மொத்தம் 12,185 தபால் அலுவலகங்கள் செயல்படுகின்றன. 2,625 தபால் அலுவலங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்பும் வசதி உள்ளதென்றா.