நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததாக பெண் ஆட்டு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

கமுதி அருகே பெண் ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டதாகக் கூறி ரூ.3 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே பெண் ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டதாகக் கூறி ரூ.3 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கிளாமரம் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலரும், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலருமான சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முதுகுளத்தூா் அருகேயுள்ள கண்டிலான் கிராமத்தைச் சோ்ந்த யசோதை என்ற பெண் ஆடுகளை விற்ற பணம் ரூ. 3 லட்சத்துடன் ஆட்டோவில் வந்தாா். அப்போது உரிய ஆவணமின்றி அந்த பணம் கொண்டு வரப்பட்டதாகக் கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். உரிய ஆவணத்தை ஒப்படைத்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும்படை அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் வட்டத்துக்குள்பட்ட தேரிருவேலி மும்முனை சந்திப்பு சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலருமான சங்கரபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியைச் சோ்ந்த யாதவ் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.55,400 மற்றும் ரூ.63,327- க்கான முன் தேதியிட்ட காசோலையை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் விஜயாவிடம் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.