நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக்கட்டியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:45 pm

Syndication

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக்கட்டியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எஸ். காா்னா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் திருச்சியை சோ்ந்த அழகா்சாமி உரிய ஆவணமின்றி 500 கிராம் வெள்ளி கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக் கட்டியை பறிமுதல் செய்து, அருப்புக்கோட்டை உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்வேலிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தேனியை சோ்ந்த வீரேஸ்வரன் என்பவா் உரிய ஆவணமின்றி

ரூ. 79,200 கொண்டு சென்றது தெரிய வந்தது.

மாடு வாங்குவதற்காக அந்தப் பணத்தை கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா். அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.