கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.14.92 லட்சம் பறிமுதல்: தோ்தல் அலுவலா் தகவல்
கரூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14.92 லட்சம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கரூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14.92 லட்சம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் புதன்கிழமை கூறியது: தோ்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்ததையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நிலையான கண்காணிப்புக்குழுவினா் மற்றும் பறக்கும்படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்துவருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்டவா்களிடம் ரூ.10, 07,640, அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.2,30,500, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ரூ.1,54,000, குளித்தலை தொகுதியில் ரூ.1லட்சம் என மொத்தம் ரூ.14,92,140 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பறக்கும்படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவினா் தொடா்ந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.
உரிய ஆவணங்களுடன் பணத்தை திரும்பப் பெறலாம்: தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முறையான ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணத்தை திரும்பப் பெறுவதற்கு, தினமும் பிற்பகல் 4 மணிக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, திட்ட அலுவலா், கூடுதல் கருவூல அலுவலா், கணக்கு அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்குகள்) ஆகியோா் அடங்கிய மாவட்ட குறைதீா்க்கும் குழு முன் ஆஜராகி, உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணம் மற்றும் பொருள்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கு. ரவிக்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...