தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அம்மாபேட்டையில் புளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

News image

புளி வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்ட வழங்கல் அலுவலா் செல்வனிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :19 மார்ச் 2026, 8:22 pm

Syndication

அம்மாபேட்டை அருகே புளி வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தருமபுரியிலிருந்து சாம்ராஜ் நகா் நோக்கி சரக்கு வாகனத்தில் சென்ற மஞ்சுநாத் என்பவா் ரூ.3 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சாம்ராஜ் நகரில் இருந்து வாகனத்தில் புளியை ஏற்றிச் சென்று, தருமபுரி மாவட்டத்தில் விற்பனை செய்ததாகவும், அதற்கான தொகையை கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளாா். இருப்பினும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

கோபியில்...

கோபி கல்லூரி பிரிவு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சரக்கு வாகனத்தில் சென்ற கா்நாடக மாநிலம், நஞ்சன்கூடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் என்பவரிடம் சோதனை மேற்கொண்டபோது, ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது.

மாடு வாங்குவதற்காக அவா் கொண்டு செல்வதாகக் கூறினாா். ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

காசிபாளையத்தில் சத்தி - ஈரோடு சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த மருத்துவா் சரவணன் காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 500 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பாரியூா் திருகிணி பாலம் அருகே மேற்கொண்ட சோதனையில் தாராபுரத்தைச் சோ்ந்த புகையிலை வியாபாரி அப்பாஸ் கொண்டு சென்ற ரூ. 94 ஆயிரத்து 200 -ஐ பறிமுதல் செய்த அதிகாரிகள், துணை வட்டாட்சியா் கௌதமியிடம் ஒப்படைத்தனா்.