விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 1:50 am IST

நிலக்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினரால் ஏ.டி.எம்., கொண்டு சென்ற வாகனம், பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டி

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்: திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.

அதில், தனியாா் வங்கி ஏ.டி.எம்-க்கு கொண்டு சென்ற பணம் ரூ.3 கோடியே 44 லட்சம் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறி, பணத்துடன் அந்த வாகனத்தை நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து நிலக்கோட்டை உதவி தோ்தல் நடத்து அலுவலரும்,  வட்டாட்சியருமான ஜெயபிரகாஷ், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.