சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

பெருந்துறை அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.94,300-ஐ தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :11 ஏப்ரல் 2026, 7:42 pm

பெருந்துறை அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.94,300-ஐ தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை அருகேயுள்ள குன்னத்தூா், செம்மாண்டம்பாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் ரூ.94,300 வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஈரோடு, தென்முக வெள்ளோட்டைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி கெளரிசங்கா் என்பதும், தேங்காய் வாங்குவதற்காக குன்னத்தூருக்கு பணத்தைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

ஆனால், ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.