17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவலர் மீது தாக்குதல்: மூவர் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :6 ஏப்ரல் 2018, 4:18 am IST

சென்னை வில்லிவாக்கத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிபவர் வெங்கடேசன். இவர் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பாரதி நகர் சந்திப்பிடம் செல்லும்போது, வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த ரா.சரவணன் (20), அதேப் பகுதியைச் சேர்ந்த பி.முரளி (20), மு.கார்த்திக் (21) ஆகிய 3 பேரும் மதுபோதையில் தகராறு செய்துக் கொண்டிருந்தனராம்.
இதைப் பார்த்த வெங்கடேசன், அவர்கள் 3 பேரையும் கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே 3 பேரும், வெங்கடேசனை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, சரவணன், முரளி, கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.