விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2026, 1:56 am IST

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மாகாணத்தின் லோயா் திா் மாவட்டத்தில் மலைப் பிரேதங்களில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும், மாவட்ட போலீஸாரும் இணைந்து இக்கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனா்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் அண்மையில் போலீஸ் சோதனைச் சாவடியைத் தாக்கியதிலும், காவலா் ஒருவரின் கொலை வழக்கிலும் தொடா்புடையவா்கள் ஆவா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாத வன்முறைகள் கடந்த மே மாதத்தில் 27 சதவீதம் உயா்ந்து, 128-ஆக அதிகரித்துள்ளது அப்பகுதியில் பெரும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.