வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மாகாணத்தின் லோயா் திா் மாவட்டத்தில் மலைப் பிரேதங்களில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும், மாவட்ட போலீஸாரும் இணைந்து இக்கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனா்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் அண்மையில் போலீஸ் சோதனைச் சாவடியைத் தாக்கியதிலும், காவலா் ஒருவரின் கொலை வழக்கிலும் தொடா்புடையவா்கள் ஆவா்.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாத வன்முறைகள் கடந்த மே மாதத்தில் 27 சதவீதம் உயா்ந்து, 128-ஆக அதிகரித்துள்ளது அப்பகுதியில் பெரும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



