மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பாகிஸ்தானில் நாடுதழுவிய தேடுதல் வேட்டை

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் பன்னு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் 4 முக்கிய தளபதிகளும் இதில் அடங்குவா்.

இதேபோல், பலூசிஸ்தான் மாகாணம் சோரப் பகுதியில் லாரி ஒன்றில் பயங்ரவாதிகள் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது, அது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் 8 பயங்கரவாதிகளும், 3 பொதுமக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அங்கிருந்து தப்பியோடியவா்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.