எரிபொருள் நிரப்பும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் எரிபொருள் நிரப்பும் நிறுவனம் தொடங்க அனுமதி கோரியுள்ளார். சென்னையில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ் அனுமதி வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஏ.கே.யாதவ், லஞ்சம் கொடுத்த சக்திவேல், இடைத்தரகராக இருந்த குமரேசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கைதான அதிகாரி ஏ.கே.யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.20) காலை 11 மணி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
