மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

லஞ்ச வழக்கு: அரசு அதிகாரியை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

எரிபொருள் நிரப்பும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, சிபிஐ

Updated On :19 ஏப்ரல் 2018, 4:21 am IST

எரிபொருள் நிரப்பும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் எரிபொருள் நிரப்பும் நிறுவனம் தொடங்க அனுமதி கோரியுள்ளார். சென்னையில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ் அனுமதி வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஏ.கே.யாதவ், லஞ்சம் கொடுத்த சக்திவேல், இடைத்தரகராக இருந்த குமரேசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கைதான அதிகாரி ஏ.கே.யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.20) காலை 11 மணி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.