எரிபொருள் நிரப்பும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் எரிபொருள் நிரப்பும் நிறுவனம் தொடங்க அனுமதி கோரியுள்ளார். சென்னையில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ் அனுமதி வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஏ.கே.யாதவ், லஞ்சம் கொடுத்த சக்திவேல், இடைத்தரகராக இருந்த குமரேசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கைதான அதிகாரி ஏ.கே.யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.20) காலை 11 மணி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாழ்க்கையின் வழிகாட்டி திருக்குறள்
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


