எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை மயிலாப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:59 pm

DIN

சென்னை மயிலாப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பா.மோகன்குமார் (36). இவர் மயிலாப்பூர் பல்லக்குமா நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையிடம் கடந்த 10-ஆம் தேதி நடந்து வந்தார். அப்போது அங்கு இரு நபர்கள், மோகன்குமார் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். 
போலீஸார் விசாரணையில், செல்லிடப்பேசியை பறித்தது தண்டையார்பேட்டை சிவாஜி நகரைச் சேர்ந்த ரா.சிவா (19), திருவொற்றியூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ரா.விக்னேஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.