மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காசிமேடு மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

மீன்கள் அழுகாமல் இருக்க பார்மாலின்' என்னும் வேதிப் பொருள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மீன் சந்தைகளில்

Updated On :9 ஜூலை 2018, 10:50 pm

மீன்கள் அழுகாமல் இருக்க பார்மாலின்' என்னும் வேதிப் பொருள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மீன் சந்தைகளில் உணவுப் பாதுகாப்பு, மீன்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.
சென்னையில் காசிமேடு, வானகரம், சைதாப்பேட்டை, அடையாறு, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீன் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 
இதில், சென்னையில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகாமல் இருக்க பார்மாலின் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாவும், இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்களை உட்கொண்டால் வயிற்று வலி முதல் புற்றுநோய் வரை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய மீன் சந்தைகளில் உள்ள கடைகளில் மீன்வளத் துறை இணை இயக்குநர் சித்ரா, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, ஒவ்வொரு கடையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது, எடுக்கப்பட்டுள்ள மீன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவில் பார்மாலின் மூலம் மீன்களைப் பதப்படுத்தியது தெரியவந்தால், மீன் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.