மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுபோதையில் தகராறு செய்வோர் மீது பெப்பர் ஸ்பிரே: விளக்கம் கோரி டிஜிபிக்கு நோட்டீஸ்

மதுபோதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது போலீஸார் பெப்பர் ஸ்பிரே' பயன்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஜிபி உள்ளிட்ட

Updated On :9 ஜூலை 2018, 10:50 pm

மதுபோதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது போலீஸார் பெப்பர் ஸ்பிரே' பயன்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் அம்பத்தூர் காவல் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தும் உத்தி கடைப்பிடிக்கப்படுவதாகவும், இதற்காக கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 400 பெப்பர் ஸ்பிரே பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளதாவும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்: இந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், எந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் மது போதையில் தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்படுகிறது? இதனால், சம்பந்தப்படுவோரின் கண் பார்வை பாதிக்கப்படாதா?. இவ்வாறு பெப்பர் ஸ்பிரே பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? என கேள்விகளை ஆணையம் எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.