பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இந்திய உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலர் பிரமோத் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் இந்திய தகவல்தொழில்நுட்பம் வடிவமைப்பு, உற்பத்தி கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், 149 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி அவர் பேசியது:
அதிநவீன செல்லிடப்பேசி கட்டமைப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு, செயற்கை அறிவாற்றல், ரோபோட்டிக், தானியங்கி வாகன இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் இந்திய அறிவாற்றலுக்கும்,பிரதமரின் உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் என்றார் பிரமோத்குமார் மிஸ்ரா.
சென்னை ஐஐடி முன்னாள் தலைவரும், கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான எம்.எஸ். ஆனந்த், கல்வி நிறுவன இயக்குநர் பன்ஷிதர் மஜ்ஜி உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


