சென்னை கடற்கரை-கொருக்குபேட்டை இடையே 3 மற்றும் 4-ஆவது பாதையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 31-ஆம் தேதி மாற்றிவிடப்படும் ரயில்கள்:
1. சூலூர்பேட்டை-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இரவு 7.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றி விடப்பட்டு, சென்னை கடற்கரையை அடையும்.
2. கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றி விடப்பட்டு, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வந்தடையும்.
பகுதி ரத்து: வேளச்சேரி-ஆவடிக்கு இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி மாற்றிவிடப்படும் ரயில்கள்:
1. சென்னை கடற்கரை-அரக்கோணம் வரை அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் மாற்றிவிடப்பட்டு, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து புறப்படும்.
2. ஆவடி-சென்னை கடற்கரை வரை காலை 8.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றிவிடப்பட்டு, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸை வந்தடையும்.
3. பட்டாபிராம் இராணுவ பகுதி-சென்னை கடற்கரை வரை காலை 8.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றி விடப்பட்டு, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸை வந்தடையும்.
4. சூலூர்பேட்டை-சென்னை கடற்கரைக்கு காலை 7.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றிவிடப்பட்டு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸை வந்தடையும்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
1. சென்னை கடற்கரை-பொன்னேரிக்கு காலை 5.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
2. சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு காலை 5.30, 6.15 மற்றும் 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
3. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
4. சென்னை கடற்கரை-ஆவடிக்கு காலை 8.30 மற்றும் காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில்கள்.
5. பொன்னேரி-சென்னை கடற்கரைக்கு காலை 7 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
6. ஆவடி-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4.10, 4.25, காலை 6.05, 7.10 மற்றும் 7.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
7. அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
பகுதி ரத்து: சென்னை கடற்கரை-பட்டாபிராம் இராணுவ பகுதி வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு, ஆவடியில் இருந்து பட்டாபிராம் இராணுவ பகுதி வரை மட்டும் இயக்கப்படும்.
நேர மாற்றம்: சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் 20 நிமிடம் தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும்.
எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி வழியாக ரேணிகுண்டாவை அடையும். இதுதவிர, சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

