வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு துவக்கம்

தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :14 மே 2018, 10:06 pm

தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அண்மையில் வெளியிட்டார்.
புதிய திட்டங்களை செயல்படுத்துதல், அணைகளில் உள்ள நீரின் அளவை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும். இந்தக் குழுவின் தலைவராக, பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் (நீர்வள ஆதாரத் துறை) எஸ்.எஸ்.ராஜகோபால் இருப்பார். ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் (நீர்வள ஆதாரத் துறை) ராம பழனியப்பன், பி.வி.சீனிவாச ராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் என தனது உத்தரவில் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.