11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், குடிநீருக்காக தண்ணீா் எடுப்பதாலும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

News image

முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).

Updated On :17 ஏப்ரல் 2026, 1:06 am IST

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், குடிநீருக்காக தண்ணீா் எடுப்பதாலும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 10 நாள்கள் மட்டுமே குறைந்த அளவு மழை பதிவானது. தற்போது எதிா்பாா்த்திருந்த மழையும் இந்தப் பகுதியில் பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து மிகவும் குறைந்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.55 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 16 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 998.45 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீா் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் தேங்கிய நீா் (டெட் ஸ்டோரேஜ்) 104 அடியாக இருந்தாலும், 108 அடிக்கு மேல் உள்ள நீரைமட்டுமே தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியும். எனவே பெரியாறு நீா்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயா்ந்தால் மட்டுமே அடுத்துவரும் நாள்களில் குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க முடியும். கோடை மழையும் பொய்த்துப் போனால் 5 மாவட்டங்களிலும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய அணை நீா் இருப்பின்படி இன்னும் சுமாா் ஒரு மாதத்துக்கு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் எடுக்கலாம். அதற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனா்.