அரக்கோணம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்ட உயரதிகாரிகள் கூறியது: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி உள்பட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. குறிப்பாக அரக்கோணத்தில் 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில் நிற்க ஏதுவாக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில்களின் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம்.
இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 119 மின்சார ரயில் சேவை வழங்கப்படுவதால் ஆண்டுதோறும் பல லட்சம் பயணிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சேவை நீட்டிக்கப்பட்டால் கூடுதலாக பயணிகள் பயன்பெறுவர்.
இது குறித்து உயரதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இந்த ரயில் சேவை அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

