அரக்கோணம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்ட உயரதிகாரிகள் கூறியது: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி உள்பட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. குறிப்பாக அரக்கோணத்தில் 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில் நிற்க ஏதுவாக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஆவடி, திருவள்ளூருக்கு இயக்கப்படும் 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில்களின் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம்.
இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 119 மின்சார ரயில் சேவை வழங்கப்படுவதால் ஆண்டுதோறும் பல லட்சம் பயணிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சேவை நீட்டிக்கப்பட்டால் கூடுதலாக பயணிகள் பயன்பெறுவர்.
இது குறித்து உயரதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இந்த ரயில் சேவை அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

