சென்னை விமான நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் நமது நீர்வழித் தடங்கள், நதிகள், பெருங்கடல்கள் போன்றவை சீர்கெட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இதையடுத்து, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடுக்க உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது முதலில் வந்த 1,000 பயணிகளுக்கு எளிதில் மக்கக் கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய ஷாப்பிங் பைகள் வழங்கப்பட்டன. அத்துடன் அடுத்து வந்த 5,000 பயணிகளுக்கு துணி பைகளும் வழங்கப்பட்டன. இந்த பைகளை சென்னை விமான நிலையப் போக்குவரத்து இயக்கப்பரிவு பொது மேலாளர் பி.கே.ஸ்ரீவத்சவா, துணை பொது மேலாளர் நந்த குமார் ஆகியோர் பயணிகளுக்கு விநியோகித்தனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கு தொடக்கமாக துணி பைகளை விமான நிலையத்தில் விநியோகித்தது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இனி பிளாஸ்டிக் பைகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என பயணிகள் சிலர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


