மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புயல் பாதிப்பு: மின் கட்டணத்தை ரத்து செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை

புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஜி.கே.வாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட  மக்களுக்கு ஆறுதல் கூறினார். 
இந்நிலையில் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தமாகா சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இந்தத் தொகை அரசிடம் வழங்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரும் கவலையில் மூழ்கியுள்ள மக்களுக்கு இது மேலும் சுமையாக இருக்கும். அதனால், புயல் பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களுக்கு இந்த மாத மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரைஅந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். மதுக்கடைகள் திறந்தால் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும்.
புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரமும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரமும், சாய்ந்து போன வாழைக்கு ஓர்  ஏக்கருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 ஆயிரமும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சமும் நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.