இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ரூ. 60 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: தம்பதி கைது

காரில் வந்த கும்பல் தன்னை தாக்கி ரூ.60 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த இளைஞரும், அவரது

Updated On :9 அக்டோபர் 2018, 4:20 am IST

காரில் வந்த கும்பல் தன்னை தாக்கி ரூ.60 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த இளைஞரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிக்கேணியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஹவாலா பணத்தைக் கொண்டு செல்வதில் திருச்சியைச் சேர்ந்த முகமது அன்சாரி ராஜா (28) ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்திகாவை சென்னைக்கு அழைத்து வந்து திருமுல்லைவாயிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார். 
பின்னர் ஞாயிற்றுக்கிழமை கையில் வெட்டுக் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற அவர், காரில் வந்த ஒரு கும்பல் தன்னை தாக்கி விட்டு, ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்று விட்டதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், முகமது அன்சாரி ராஜா பணத்தை தனது மனைவி ஆர்த்திகாவிடம் கொடுத்துவிட்டு, காரில் வந்த கும்பல் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியது தெரியவந்தது. 
இதையடுத்து திருமுல்லைவாயிலில் உறவினர் வீட்டில் இருந்த ஆர்த்திகாவிடம் இருந்து ரூ.60 லட்சம் ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.