காரில் வந்த கும்பல் தன்னை தாக்கி ரூ.60 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த இளைஞரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிக்கேணியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஹவாலா பணத்தைக் கொண்டு செல்வதில் திருச்சியைச் சேர்ந்த முகமது அன்சாரி ராஜா (28) ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்திகாவை சென்னைக்கு அழைத்து வந்து திருமுல்லைவாயிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை கையில் வெட்டுக் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற அவர், காரில் வந்த ஒரு கும்பல் தன்னை தாக்கி விட்டு, ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்று விட்டதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், முகமது அன்சாரி ராஜா பணத்தை தனது மனைவி ஆர்த்திகாவிடம் கொடுத்துவிட்டு, காரில் வந்த கும்பல் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியது தெரியவந்தது.
இதையடுத்து திருமுல்லைவாயிலில் உறவினர் வீட்டில் இருந்த ஆர்த்திகாவிடம் இருந்து ரூ.60 லட்சம் ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்

கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பெரம்பலூா் ஆட்சியா் ஆய்வு: சீரான குடிநீா் விநியோகத்துக்கு அறிவுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
