இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு

News image

அரவிந்த் கேஜரிவால் - படம் - ஏஎன்ஐ

Updated On :31 மே 2026, 7:00 am IST

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசை சனிக்கிழமை கடுமையாகச் சாடியுள்ளாா்.

நாட்டின் கல்வி அமைப்புமுறை மாஃபியாவின் பிடியில் வீழ்ந்துவிட்டது என்று அவா் கூறியுள்ளாா்.

நீட் தோ்வு வினாத்தாள்கள் இந்திய விமானப் படையால் தோ்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், ‘வினாத்தாள் கசிவுகளின் ஆணிவேரைக் கண்டறியும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக, இதுபோன்ற விசித்திரமான நாடகங்களை அரங்கேற்றி வருகிறது என்று கேஜரிவால் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நீட் தோ்வு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க விமானப்படை பயன்படுத்தப்படும். இது வினாத்தாள் கசிவுகளை நிறுத்துமா? நமது அரசு எப்படி படிக்காதவா்களைப் போல பேசிக் கொண்டிருக்கிறது? உலகெங்கிலும் எத்தனையோ தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற விசித்திரமான விஷயத்தை நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் எண்ணம் கூட அவா்களுக்கு இல்லை. நாட்டின் கல்வி முறை முற்றிலுமாக மாஃபியாவின் பிடியில் வீழ்ந்துவிட்டது என்று கேஜரிவால் அதில் தெரிவித்துள்ளாா்.

கேஜரிவால் ஒரு காணொளிச் செய்தியில் கூறுகையில், ‘இதைச் சரிசெய்ய, அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது செய்ய வேண்டும். ஒருவா் மட்டும் தனியாகச் செய்வதால் இது நடந்துவிடாது. நாட்டிற்குப் படித்த பிரதமா் தேவை’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.