விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பொங்கல்: 5.38 லட்சம் பேர் வெளியூர் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

Updated On :15 ஜனவரி 2019, 4:13 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5.38 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 8.54 கோடி டிக்கெட் கட்டணம் வசூலாகியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. ஜனவரி 11 முதல் 14 வரை 14,263 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 13 -ஆம் தேதி வரை மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 
இவற்றில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 8 கோடியே 54 லட்சம் டிக்கெட் கட்டணம் வசூலாகியுள்ளது.
இதுபோல, பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.