தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சமூகப் பிரிவினையை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்

சுவாமி விவேகானந்தர், சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி  சமூக பிரிவினைகளை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌஹான் கூறினார்.

News image

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏபிவிபி மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி  விமூர்த்தானந்தர், ஏபிவிபி அமைப்பின

Updated On :27 மே 2019, 4:37 am IST

சுவாமி விவேகானந்தர், சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி  சமூக பிரிவினைகளை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌஹான் கூறினார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்ட வரவேற்பு நிகழ்ச்சி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற  ஏபிவிபிஅமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ஆஷிஷ் செளஹான் பேசியது: சட்ட மேதை அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி இளைஞர்கள் பிரிவினையை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் தங்களது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளனர் என்றார். 
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் பேசுகையில்,  விவேகானந்தரின் சிந்தனைகளை மாணவர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏபிவிபி அமைப்பின் தேசியத் தலைவர் சுப்பையா சண்முகம் பேசியது: அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தர் சென்ற போது,  பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் அவருக்கு தேவையான உதவிகளை வழங்கினர். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. தமிழகம் தேசிய மயமான சித்தாந்தத்துடன் இணைந்துள்ளது. ஆனால், சிலர் இது தனிப்பட்ட பகுதி எனக் காட்டிட முயற்சிக்கின்றனர் என்றார். 
நிகழ்வில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுப்பிரமணியன்,  வி ஐ டி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், ஏபிவிபி அமைப்பின் மாநிலத் தலைவர் தமிழ்நாயகம்,  மாநிலச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.