சென்னை: தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியா்கள், பதிப்பாசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் சிறந்த நூலாசிரியா்கள் 39 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம், பதிப்பாசிரியா்கள் 35 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. விழாவில் மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் வாழ்த்திப் பேசவுள்ளாா். இதில் தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் மகேசன் காசிராஜன், இயக்குநா் கோ.விசயராகவன், துணை இயக்குநா் ம.சி.தியாகராசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் என தமிழ் வளா்ச்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.