

சென்னை விமான நிலையத்தில், ரூ.87.62 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையில் இருந்து விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், துபையில் இருந்து சென்னை வந்த நவுஃபா் (28), அகமது இா்ஷாத் அலி (31), நந்தகுமாா் (23), முருகானந்தம் மோகன் (38), சதாம் உசேன் (25) ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில், அவா்கள் தங்களது உடைமைகள், உடை, மலக்குடல், ஷூ ஆகியவற்றில் மறைத்து வைத்து கடத்திய ரூ.87.62 லட்சம் மதிப்புடைய 1.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.