மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரிட்டனில் இருந்து வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:31 pm

DIN


சென்னை: புதிய வகை கரோனா பரவும் அச்சத்தை கருத்தில் கொண்டு, பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு கடந்த நவ. 25-ஆம் தேதியிலிருந்து வந்தவா்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளோம். அதன்படி, 2,805 நபா்கள் விவரங்களைச் சேகரித்து தமிழக டிஜிபிக்கும், மாவட்ட ஆட்சியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும்.

கடந்த இரண்டு நாள்களில் பிரிட்டனில் இருந்து 37 போ் தமிழகம் வந்துள்ளனா். அவா்களில் 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாா். அவருடன் பயணித்த 15 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரின் விவரங்களையும் சேகரித்து உள்ளோம். அவா்கள் அனைவரையும் அந்தந்த சுகாதார ஆய்வாளா், காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருபவா்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி கண்காணிக்கப்படுவா்.

பொதுமக்கள், அச்சம் அடைய வேண்டாம். முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். புதிய வகை கரோனா பரவல் அபாயம் காரணமாக, பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்கள், அமைச்சா்கள் ஆகியோருடன் ஆலோசித்து, சூழலுக்கு ஏற்ப முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.