ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

புதிய கட்சி தொடங்கினார் புகழேந்தி!

புரட்சி அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கிய புகழேந்தி.

புகழேந்தி (கோப்புப்படம்)

Published On :

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி இன்று(மார்ச் 4) தொடங்கினார்.

சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தி, பின்னர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவில் புகழேந்தி இருந்து வந்தார்.

அண்மையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், பெங்களூரு புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் புதிய கட்சியை சசிகலா தொடங்கினார். அவர், அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

அதேபோல, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதிய கட்சியை பிப். 19ல் தொடங்கினார்.

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம் (திவெக)’ என்ற புதிய கட்சியை கடந்த நவம்பரில் தொடங்கினார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகயிருந்த பெங்களூரு புகழேந்தி புதிய கட்சியை இன்று தொடங்கினார்.

Summary

Pugazhendi has started a new party!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.