புதுதில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை எதிர்நோக்கி வருகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட இரண்டு நாள் சரிவில், முதலீட்டாளர்கள் ரூ.16.32 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 28 முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி நடைபெற்று வருவதால், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையான சென்செக்ஸ் 2,171 புள்ளிகள் சரிந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.16,32,428.12 கோடி சரிந்து ரூ.4,47,18,243.15 கோடியாக உள்ளது.
இன்றைய தொடக்க வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை சரிந்து வர்த்தகமானது. பலவீனமான உலகளாவிய குறிப்புகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகலாவிய அரசியல் பதற்றங்களுக்கு நடுவில் வர்த்த போக்கும் சரிவை நோக்கி பயணித்தன. அதே வேளையில், தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி உள்ளிட்டவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முற்றிலும் குலைத்தது.
பிஎஸ்இ-யில் செலக்ட் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 2.42 சதவீதமும், மிட்கேப் செலக்ட் இன்டெக்ஸ் 2.10 சதவீதமும் சரிந்தன.
துறை வாரியான குறியீடுகளில், உலோகம் 4 சதவீதமும், பிஎஸ்இ-யில் பொதுத்துறை வங்கி 3.50 சதவீதமும், தொழில்துறை 3.29 சதவீதமும், ரியல் எஸ்டேட் 3.16 சதவீதமும், மூலதன பொருட்கள் 2.64 சதவீதமும், மின்சாரம் 2.59 சதவீதமும், சேவை துறை 2.25 சதவீதம் மற்றும் எரிசக்தி 2.23 சதவீதம் சரிந்தன.
இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 3,245 பங்குகள் சரிந்த நிலையில் 1,053 பங்குகள் உயர்ந்தும் 135 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
Summary
Equity investors became poorer by Rs 16.32 lakh crore in the two-day fall in the stock market.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.90 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கடந்த மே மாதத்தில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி

பங்குச் சந்தை சரிவு எதிரொலி: ஒரே நாளில் ரூ. 6.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




