திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: பங்கு சந்தையில் ரூ. 16.32 லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை எதிர்நோக்கி வருகின்றன.

News image
கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 2:34 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை எதிர்நோக்கி வருகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட இரண்டு நாள் சரிவில், முதலீட்டாளர்கள் ரூ.16.32 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 28 முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி நடைபெற்று வருவதால், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையான சென்செக்ஸ் 2,171 புள்ளிகள் சரிந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.16,32,428.12 கோடி சரிந்து ரூ.4,47,18,243.15 கோடியாக உள்ளது.

இன்றைய தொடக்க வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை சரிந்து வர்த்தகமானது. பலவீனமான உலகளாவிய குறிப்புகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகலாவிய அரசியல் பதற்றங்களுக்கு நடுவில் வர்த்த போக்கும் சரிவை நோக்கி பயணித்தன. அதே வேளையில், தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி உள்ளிட்டவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முற்றிலும் குலைத்தது.

பிஎஸ்இ-யில் செலக்ட் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 2.42 சதவீதமும், மிட்கேப் செலக்ட் இன்டெக்ஸ் 2.10 சதவீதமும் சரிந்தன.

துறை வாரியான குறியீடுகளில், உலோகம் 4 சதவீதமும், பிஎஸ்இ-யில் பொதுத்துறை வங்கி 3.50 சதவீதமும், தொழில்துறை 3.29 சதவீதமும், ரியல் எஸ்டேட் 3.16 சதவீதமும், மூலதன பொருட்கள் 2.64 சதவீதமும், மின்சாரம் 2.59 சதவீதமும், சேவை துறை 2.25 சதவீதம் மற்றும் எரிசக்தி 2.23 சதவீதம் சரிந்தன.

இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 3,245 பங்குகள் சரிந்த நிலையில் 1,053 பங்குகள் உயர்ந்தும் 135 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.