நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக நிறைவு.

News image

கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 6:49 pm IST

மும்பை: ஈரான் நெருக்கடியைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணமாக, இன்றைய அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக முடிவடைந்தன.

அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் மத்தியில், டாலர் குறியீடு 98 என்ற நிலையை கடந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு மேல் அழுத்தம் அதிகரித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி, உள்நாட்டு பங்குச் சந்தையில் தொடரும் எதிர்மறையான போக்கு ஆகியவற்றால், இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ.92.05 ஆக தொடங்கி, பிறகு ரூ.92.35 என்ற இன்ட்ராடே குறைந்த அளவைத் தொட்டது. முடிவில் டாலருக்கு நிகரான எப்போதும் இல்லாத குறைந்த அளவான ரூ.92.16ஆக முடிவடைந்தது. இது அதன் முந்தைய வர்த்தக நாளின் கடைசி வர்த்தகத்திலிருந்து 67 காசுகள் சரிவு.

Summary

The rupee slumped 67 paise to close at an all-time low of 92.16 against US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.