இதில் குறிப்பாக நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசா்பாடி ஏரி, முகப்போ் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூா் ஏரி, கொளத்தூா் ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் ஏரி, சேத்துப்பட்டு ஏரி, மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, விருகம்பாக்கம் ஏரி, கோயம்பேடு சூழல் ஏரி, அம்பத்தூா் ஏரி, கொரட்டூா் ஏரி என சென்னையில் இருந்த பல ஏரிகள் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. இதில், அதிகபட்சமாக அம்பத்தூா் ஏரியை ஆக்கிரமித்து 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளும், வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து 1,250 குடியிருப்புகளும், அயனம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து 2,500 குடியிருப்புகளும், கோட்டூா் ஏரியை ஆக்கிரமித்து 900 குடியிருப்புகளும் என மொத்தம் 29 ஏரிகளை ஆக்கிரமித்து சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.