சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடி பேரம்! வெளியானது பரபரப்பு வாக்குமூலம்!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடியில் பேரம் நடத்தப்பட்டதாக வழக்கில் கைது செய்யப்பட்டோர் வாக்குமூலம் குறித்து...

News image

கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் ரமேஷ் - கார்த்தி - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 2:36 pm IST

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடியில் பேரம் நடத்தப்பட்டதாக வழக்கில் கைது செய்யப்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சில நாள்களுக்கு முன்பு சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், சென்னையைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, தியாகராஜன், , நரேஷ், சீனிவாசன், செல்வன், ராஜேஷ், முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ரூ. 180 கோடி வரையில் ஒதுக்கப்பட்டதாகவும், ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று ஆட்சியைக் கவிழ்க்கும் சதித் திட்டத்தில் ஒரு வாரமாக ஈடுபட்டிருந்ததாகவும், விவகாரம் வெளியில் கசிந்ததால் அங்கிருந்து காலி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சதித் திட்டத்தில் ஈடுபட்ட கார்ப்பரேட் நிறுவனம் கண்டறியப்பட்டதாகவும், கூடிய விரைவில் சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Summary

Rs. 180 crore deal to topple the TVK government: Sensational confession revealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.