முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், “தகவல் ஆணைய அதிகாரிகள் நியமனத்தில் அரசு உயா் அதிகாரிகளை மட்டும் நியமிக்கப்படுவதை மாற்றி, பிற துறைகளில் சிறந்து விளங்கும் நபா்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும் இந்த நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், மேற்குவங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம், குஜராத், நாகாலாந்து, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் தகவல் ஆணையா் காலிப் பணியிடங்களை கால தாமதமின்றி ஒரு மாதம் முதல் 6 மாதங்களுக்குல் நிரப்பிவிடவேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.