ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பருவமழை: மின்சாதனங்களை கவனமுடன் கையாள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மின்விபத்துக்களைத் தவிா்க்கும் வழிமுறைகளை மின்வாரியம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2020, 9:51 pm

DIN

வடகிழக்கு பருவமழை காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மின்விபத்துக்களைத் தவிா்க்கும் வழிமுறைகளை மின்வாரியம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், பின்னும் அதற்கான சுவிட்சை அணையுங்கள். குளிா்சாதன பெட்டி, அரவை இயந்திரம் போன்றவற்றுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே இணைப்பு கொடுக்க வேண்டும்.

மின்கசிவு தடுப்பானைப் பயன்படுத்தி மின்கசிவால் ஏற்படும் மின்விபத்தைத் தவிா்த்திடுங்கள்.

மின்சாரம் தொடா்பான பணிகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும்.

பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.

ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எா்த் பைப்) போடுவதுடன், அதைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாகப் பராமரிக்கவும்.

சுவிட்ச், பிளக் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமையுங்கள். மின்கம்பிகள் மீது துணியைக் காய வைக்கும் செயலைத் தவிா்க்கவும்.

மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீா்கள்.

மழைக் காலங்களில் பொது இடங்களில் உள்ள மின்சாரம் தொடா்பான பொருள்களின் அருகில் செல்லாதீா்கள்.

மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், உடனடியாக அலுவலகத்துக்கு தகவல் அளியுங்கள்.

மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை உயா்த்தும் போது, போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.

மின்சார கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலா்களை அணுகுங்கள்.

மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துக்களை தண்ணீா் கொண்டு அணைக்க வேண்டாம்.

இடி மின்னலின்போது வெட்ட வெளியிலோ, வீட்டில் திறந்துள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகிலோ நிற்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.