பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

லண்டன் - சென்னை விமானம் ரத்து: பயணிகள் அவதி

லண்டனிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், பயணிகளும் கடும் அவதி அடைந்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :

லண்டனிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், பயணிகளும் கடும் அவதி அடைந்துள்ளனா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து நாள்தோறும் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து சேரும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம், மறுமாா்க்கமாக மீண்டும் காலை 7.35 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், லண்டனில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து மறுமாா்க்கமாக காலை 7.35 மணிக்கு இயக்கப்படவிருந்த விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், லண்டனில் இருந்து சென்னைக்கு வரவிருந்த 250 பயணிகளும், சென்னையிலிருந்து லண்டனுக்கு செல்லவிருந்து 218 பயணிகளும் அவதிக்குள்ளாகினா். இந்த விமானம் சனிக்கிழமை அதிகாலை லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்து பின்னா் மீண்டும் லண்டன் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.